Number 1 Bowler : நம்பர் 1 பவுலருக்கு உலக கோப்பை அணியில் வாய்ப்பு கிடைக்குமா?
மும்பை :
ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை யுஸ்வேந்திர சாஹல் (Number 1 Bowler) பெற்றுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 1 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார். 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் ஒரு பந்துவீச்சாளர் 200 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டுவது இதுவே முதல்முறை. இதன் மூலம், சாஹல் உலகின் சிறந்த டி20 பந்துவீச்சாளர்களில் ஒருவராக தன்னை நிரூபித்துள்ளார். ஆனால் அவர் இந்திய அணிக்காக ஒரு டி20 உலகக் கோப்பை போட்டியில் கூட விளையாடவில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
Number 1 Bowler - யுஸ்வேந்திர சாஹல் :
டி20 உலக கோப்பை தொடரில் ஒவ்வொரு முறையும் மற்ற சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். ஐபிஎல் தொடரில் சாஹல் சிறப்பாக பந்துவீசினாலும், டி20 அணியில் அவரை முக்கிய வீரராக இந்திய அணி நிர்வாகம் கருதாதது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஓராண்டுக்கு முன்பு வரை ஒருநாள் அணியில் நிரந்தர சுழற்பந்து வீச்சாளராக இருந்த சாஹல், டி20 அணியில் வந்து இறங்கி வருகிறார். ஆனால் சாஹலை இந்திய அணியில் இருந்து ஓராண்டுக்கு பிசிசிஐ ஒதுக்கியுள்ளது. ஒருநாள் அணியிலும் அவர் இடம்பெறவில்லை. தற்போது நடைபெற்று வரும் 2024 ஐபிஎல் தொடரை தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரும் நடைபெறவுள்ளது. அந்த தொடருக்கான இந்திய அணி தேர்வில் சாஹலுக்கு இடம் அளிக்கப்படாது என்று கூறப்படுகிறது. ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய பிறகு சாஹலை (Number 1 Bowler) இந்திய டி20 அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
சென்னை :
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணிக்கு தேர்வாகியுள்ள சமீர் ரிஸ்வி, தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். சாதாரணமாக ஒரு இளைஞரை சிஎஸ்கே தேர்வு செய்தால் அவ்வளவு சீக்கிரம் வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள். சிஎஸ்கே அணியில் ஷேக் ரஷித், ராஜவர்தன் ஹேங்கர்கர், நிசாந்த் சிந்து போன்ற வீரர்கள் அனைவரும் இன்னும் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். ஆனால் சமீர் ரிஸ்வி தேர்வு செய்யப்பட்ட முதல் சீசனில் முதல் போட்டியில் இருந்தே அணியில் உள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகின்ற சமீர் ரிஸ்விக்கு மூன்று முறை மட்டுமே பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் டெல்லி அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் ரிஸ்வி 1 ரன் மட்டுமே எடுத்து லக்னோ அணிக்கு எதிராக டக் அவுட் ஆனார். சமீர் ரிஸ்வி மீது சிஎஸ்கே அதிக நம்பிக்கை வைத்துள்ளது.
சமீர் ரிஸ்வி :
நாளைய சென்னையின் நட்சத்திரமாக சமீர் ரிஸ்வி இருப்பார் என தோனி நம்புகிறார். இந்நிலையில் சமீர் ரிஸ்விக்கு கூடுதல் வாய்ப்பு வழங்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி துடுப்பாட்ட வரிசையில் சமீர் ரிஸ்வி சற்று முன்னதாக விளையாட வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் சமீர் ரிஸ்விக்கு கடைசி கட்டத்தில் பந்துகளை எப்படி அடிக்க வேண்டும் என்று தோனி பாடம் நடத்தினார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில், சமீர் ரிஸ்வியை பெரிய ஷார்ட் விளையாடுமாறு தோனி கேட்டுக் கொண்டார். சமீர் ரிஸ்வி மற்றும் தோனி இருவரும் பயிற்சி முகாமில் மாறி மாறி பெரிய ஷார்ட் அடிக்கும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது தோனி பந்தை எப்படி அடிக்க வேண்டும் என்று சில ஆலோசனைகளை வழங்கினார். இந்த பயிற்சி முகாமை ஜடேஜா கவனித்து சமீர் ரிஸ்விக்கு அறிவுரை வழங்கினார். ஜடேஜா, தோனி போன்ற நட்சத்திர வீரர்கள் சமீர் ரிஸ்விக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, அவர் வரும் போட்டிகளில் சிஎஸ்கேக்கு மிக முக்கியமான வீரராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Latest Slideshows
-
New Cayenne GTS மாடல் ரூ.2 கோடி விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது
-
EB Bill Payment Via WhatsApp - தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய புதுப்பிப்பு
-
Irfan Pathan Warning : ருதுராஜிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்படலாம்
-
Cannes 2024 - 77வது பதிப்பு மே 14 முதல் தொடங்கி மே 25, 2024 வரை
-
Gambhir Appreciated Samson : சஞ்சு சாம்சனுக்கு கம்பீர் புகழாரம்
-
Google I/O News Updates
-
Online Patta Transaction : இனி ஆன்லைன் மூலமாகவே பட்டா வாங்கலாம்
-
Watson About RR Loss : ராஜஸ்தான் அணி எப்போதும் கடைசி கட்டத்தில் சொதப்புகிறது
-
TN's First Floating Ship Restaurant - தமிழகத்தின் முதல் மிதக்கும் கப்பல் உணவகம்
-
Nandini's T20 World Cup Sponsor - சர்வதேச அரங்கில் Nandini Brand-டை அறிமுகம் செய்ய நல்ல வாய்ப்பு