Kilambakkam Bus Terminus Latest News : தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும்

தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் நாளை அதாவது ஜனவரி 30ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் (Kilambakkam Bus Terminus Latest News) என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து தடப் பேருந்துகளும் கிளாம்பாக்கிலிருந்து (KCBT) (Kilambakkam Bus Terminus Latest News) இயக்கப்படுகின்றன. ஜனவரி 24 முதல் தனியார் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

Kilambakkam Bus Terminus Latest News - தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம் :

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழக முதல்வரின் உத்தரவின்படி, அனைத்து போக்குவரத்து கழகங்களை சார்ந்த தென் மாவட்டங்களுக்கு செங்கல்பட்டு திண்டிவனம் வழியாக செல்லும் பேருந்துகள் 30/01/2024 அன்று முதல் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், சென்னை மக்களின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன கலைஞரின் நூற்றாண்டு பேருந்து முனையம் 30/12/2023 அன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களால் திறக்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் அனைத்துப் பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து (KCBT) இயக்கப்படுகின்றன.

பின்னர் 24/1/2024 முதல் தனியார் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக வரும் 30/01/2024 (செவ்வாய்கிழமை) அன்று முதல் செங்கல்பட்டு திண்டிவனம் வழியாக அனைத்து போக்குவரத்துக் கழகங்களைச் சார்ந்த தென் மாவட்டங்களுக்கு 710 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். மேலும், மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து 160 பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கண்ட செங்கல்பட்டு திண்டிவனம் வழியாக செல்லும் பேருந்துகள் 30/1/2024 முதல் இயக்கப்படாது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ECR வழியாக இயக்கப்படும் பேருந்துகள் பூந்தமல்லி வழியாக வேலூர், ஓசூர், ஆம்பூர், திருப்பத்தூர் செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

மேற்குறிப்பிட்ட பேருந்து இயக்க மாற்றத்தில் பயணிகளின் வசதிக்காக விழுப்புரம் போக்குவரத்து மண்டல பேருந்துகள் மட்டும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி செல்லும் போது தாம்பரம் வரை இயக்கப்பட்டு பின் அங்கிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட அறிவிப்பின்படி மக்கள் பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Latest Slideshows

Leave a Reply