Wonderla Theme Park Chennai : சென்னையில் ரூ.510 கோடியில் தயாராகும் வொண்டர்லா தீம் பார்க்
இந்தியாவில் முன்னணி தீம் பார்க் நிறுவனமாக வொண்டர்லா திகழ்ந்து வருகிறது. கொச்சி, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் வொண்டர்லா தீம் பார்க் நிறுவனத்தின் கிளைகள் உள்ளன. விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இங்குள்ள சில விளையாட்டுகள், குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளன, எனவே வொண்டர்லா தீம் பார்க்கிற்காக தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பெங்களூரு போன்ற இடங்களுக்கு ஏராளமானோர் வருகிறார்கள். தமிழகத்தில் வொண்டர்லா தீம் பார்க் அமைக்க அரசு மற்றும் வொண்டர்லா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (Wonderla Theme Park Chennai) கையெழுத்தானது. சில காரணங்களால் பணிகள் உடனடியாக தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதேபோல், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசும் சுற்றுலாத்துறை மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. அதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில், தமிழக அரசு சுற்றுலாத்துறை சார்பில், ஒற்றைச் சாளர முறையில் பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் தீம் பார்க் அமைக்க அனுமதி வழங்கப்படும் என சுற்றுலா கொள்கையை அறிவித்தது. டிஸ்னி, யுனிவர்சல் ஸ்டுடியோஸ் போன்ற உலகின் முக்கிய தீம் பார்க் போன்று, சென்னை புறநகர் பகுதிகளிலும் அமைக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலேயே மிகப்பெரிய “ரோலர் கோஸ்டர்” சென்னை புறநகரில் (Wonderla Theme Park Chennai) அமையப் போகிறது. இதன் மூலம் இந்தியாவின் பார்வை தமிழகத்தை நோக்கி திரும்பியுள்ளது.
Wonderla Theme Park Chennai - தமிழகத்தில் வொண்டர்லா :
வொண்டர்லா நிறுவனம் இந்தியாவில் ஐந்தாவது கிளையை தமிழகத்தில் அமைக்க உள்ளது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை புறநகரில் உள்ள பழைய மகாபலிபுரம் சாலையில், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த இள்ளளூரில் 62 ஏக்கர் பரப்பளவில் சுமார் 510 கோடி ரூபாய் மதிப்பில் இந்த பூங்கா அமைக்க (Wonderla Theme Park Chennai) தமிழக அரசின் ஒப்புதலுடன் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பிரமாண்டமான பொழுதுபோக்கு பூங்காவில் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுவர அந்நிறுவனம் முயற்சித்து வருகிறது. இந்த பொழுதுபோக்கு பூங்காவில் பார்வையாளர்களுக்கு பல்வேறு புதிய மற்றும் வித்தியாசமான அனுபவங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. பொலிகர் & மாபிலார்ட் கோஸ்டர் சென்னையில் உள்ள வொண்டர்லா பூங்காவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. ரோலர் கோஸ்டர் அமைக்கும் பணிக்கான அனுமதி கிடைத்துள்ளதால், அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோலர் கோஸ்டர் அமைப்பதற்கு தேவையான முன் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் :
தற்போது சென்னையில் அமைய உள்ள ரோலர் கோஸ்டர் இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் லண்டன், நியூயார்க் போன்ற நகரங்களில் இருப்பது போன்ற “ரோலர் கோஸ்டர்” சென்னையிலும் அமைக்கப்படும். ரோலர் கோஸ்டர் அமைப்பதற்கு மட்டும் 80 கோடி ரூபாய் வரை செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. 2026ம் ஆண்டுக்குள் அனைத்து பணிகளையும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest Slideshows
-
A Journey Of Ten Thousand Miles : பத்தாயிரம் மைல் பயணம் புத்தக விமர்சனம்
-
Investigations in Hydrothermal Sulfide Systems in Ocean : கடலின் ஆழத்தில் ஒளிந்திருக்கும் Hydrothermal Sulphide பற்றிய ஆய்வுகள்
-
Intetesting Facts about Chameleons: பச்சோந்திகள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்
-
SP Balasubrahmanyam Road : மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பெயரில் சாலை திறப்பு
-
Valentine's Day 2025 : காதலர் தினம் வரலாறும் & கொண்டாட்டமும்
-
SBI Special Officer Recruitment 2025 : எஸ்பிஐ வங்கியில் 42 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Success Story Of Grand Sweets : கிராண்ட் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் நிறுவனத்தின் வெற்றிக் கதை
-
Thaipusam 2025 : தைப்பூசம் வரலாறும் கொண்டாடும் முறையும்
-
NASA Plans To Two Satellites : சூரியனை ஆய்வு செய்ய ஸ்பெரெக்ஸ் மற்றும் பஞ்ச் என்ற இரு செயற்கைகோளை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது
-
Passion Fruit Benefits In Tamil : பேஷன் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்