செல்லப்பிராணிகளுடன் குழந்தைகள் வளரும்போது அவர்கள் அனுபவிக்கும் நன்மைகள்
இன்றைய தம்பதிகள் குடும்பத்திற்கு ஒரு குழந்தை போதும் என்ற பாதையில் செல்லும்போது, வீட்டில் குழந்தைகள் உணர்ச்சி ரீதியாக, மனரீதியாக பாதிக்க படுகிறார்கள். அதனால் குழந்தைகள் ஒரு நாய்க்குட்டி அல்லது பூனைக்குட்டியுடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் வரும் அன்பையும் பாசத்தையும் விரும்புகிறார்கள். செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிடுவது குழந்தைகளுக்கு பச்சாதாபம், நம்பிக்கை, பொறுப்பு மற்றும் புரிதலை வளர்க்கும்.
2017 இல் RAND கார்ப்பரேஷன் Anthrozoos இதழில் வெளியிட்ட ஆராய்ச்சி
2017 இல் RAND கார்ப்பரேஷன் Anthrozoos இதழில் வெளியிட்ட ஆராய்ச்சியில் செல்லப்பிராணிகளுடன் வளரும் குழந்தைகள் சிறந்த ஆரோக்கியம், நல்ல நடத்தை மற்றும் நல்ல முறையில் கற்றல், மிகவும் கீழ்ப்படிதல், உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருத்தல் போன்ற நல்ல குணங்களைவெளிப்படுத்துகிறார்கள்,” என்று அவர் கூறுகிறது .
இணைப்பை எளிதாக்கும், பிற்கால உறவுகள் மேம்படும்
செல்லப்பிராணிகளுடன் வளரும் குழந்தைகள் பிராணிகளுடன் பற்றுதல் கொள்கிறார்கள். அன்பான பிணைப்புகளை வளர்க்கிறார்கள். குழந்தைகளின் செல்லப்பிராணிகளுடானா பற்றுதல் மற்றும் நெருங்கிய பிணைப்பு பெரிதும் பயனளிக்கும். செல்லப்பிராணியின் தேவைகளைப் புரிந்துகொள்வது, வழங்குவது, போதுமான கவனிப்பு அளிப்பது நேரம் செலவிடுவது போன்றவை உணர்ச்சி ரீதியாக, மனரீதியாக புரிதலை வளர்க்கும் என்று அவர் கூறுகிறார்.
செல்லப்பிராணிகள் குழந்தையின் இணைப்புத் தேவைகளை , பிற்கால உறவுகளை மாதிரியாக்குவதற்கு பாதுகாப்பான தளத்தை வழங்குகின்றன. இதன் மூலம் பிற்கால உறவுகள் மேம்பட முடியும் என்பதை ஆராய்ச்சி நிரூபித்துள்ளது. மேலும் , செல்ல நாயுடன் இணைக்கப்படுவது, நடுநிலைப் பள்ளியில் சிறந்த முறையில் படிக்க உதவும் என்று பரிந்துரைக்கிறது.
சுயமரியாதை மற்றும் மற்றவர்களை ஏற்றுக்கொள்வது மேம்படும்
குழந்தைகள் கோபமாக, சோகமாக அல்லது தொந்தரவாக இருக்கும்போது, செல்லப்பிராணிகள் “சுய-பொருளின் தேவைகளை பூர்த்தி செய்து, சுயமரியாதை, ஒத்திசைவு உணர்வு, அமைதி மற்றும் சுய மற்றும் மற்றவர்களை ஏற்றுக்கொள்வது” ஆகியவற்றைப் பூர்த்தி செய்கின்றன என்று ஆய்வுகள் கூறு கின்றன. இது குறிப்பாக கவலை, மனச்சோர்வு மற்றும் நடத்தை பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்கு அவசியம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
அறிவாற்றல் வளர்ச்சி மேம்படும்
குழந்தைகளின் மொழியறிவை செல்லப்பிராணிகள் விரைவுபடுத்தலாம் மற்றும் குழந்தைகளின் வாய்மொழித் திறனை அதிகரிக்கலாம். மேலும் , செல்லப்பிராணிகள் குழந்தைகளின் கூக்குரலுக்கு பாராட்டு, கண்டனம் அல்லது பாசத்திற்கான தூண்டுதலை வழங்குவதன் மூலம் பேச்சை ஊக்குவிக்கின்றன. செல்லப்பிராணியால் வழங்கப்படும் உணர்ச்சிபூர்வமான ஆதரவால் கற்றல் நடைபெறுகிறது. மொழி, திட்டமிடல் திறன், மெட்டா-அறிவாற்றல் உள்ளிட்ட நிர்வாக செயல்பாடுகளின்செயல்திறனை மேம்படுத்தி அதன் மூலம் கல்வி செயல்திறனை மேம்படுத்த முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
தனிமையைக் கையாள்வது மேம்படும்
குழந்தைகளுக்கு மனச்சோர்வு, மற்றும் பதட்டத்தை சமாளிக்க உதவுகிறது. செல்லப்பிராணிகளை வளர்க்கும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், செல்லப்பிராணிகளை வளர்க்காதவர்களுடன் ஒப்பிடும்போது தனிமையின் சோதனைகளில் குறைவான மதிப்பெண்களைப் பெற்றனர். தனிமையின் சோதனைகளில் பெரும்பாலான ஆய்வுகள் இளம் பருவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் கடித்தல், ஒவ்வாமை அல்லது பொறாமை போன்றவற்றால் ஆபத்துகள் உள்ளன என்பதை மனதில் கொள்ள வேண்டியது அவசியம்.