இரட்டை குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிட நயன்தாரா, விக்னேஷ் சிவன்
தமிழ் திரையுலகின் முக்கிய கதாநாகியாகியாக வளம் வரும் நயன்தாரா அவர்கள் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி தயாரிப்பாளர் சிவன் விக்னேஷ் அவர்களை முக்கிய திரை பிரபலங்கள் சூழ மாமல்லபுரத்திற்கு அருகே உள்ள ஒரு ஹொட்டலில் திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து அடுத்த 4 மாதங்களில் வாடகைத் தாய் முறைப்படி இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்து நயன்தாரா அம்மாவானர். இந்த இரண்டு குழந்தைகளுக்கும் “உயிர் மற்றும் உலகம்” என நயன்தாரா மற்றும் சிவன் விக்னேஷ் இருவரும் சேர்ந்து பெயர் சூட்டினார்கள். நயன்தாரா திருமணத்திற்கு முன்பு வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் முக்கிய நாட்களின், சிவன் விக்னேஷ் உடன் வெளிநாடுகளில் சுற்று பயணம் மேற்கொண்டுவந்தார். அந்த நேரத்தில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தன்னுடைய ரசிகர்களை கவனம் ஈர்த்தது.
கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன்
இந்த கிறிஸ்துமஸ் தினத்தில் நயன்தாரா, சிவன் விக்னேஷ் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் உடை அணிந்து நால்வரும் சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடினார்கள், இதனை தொடர்ந்து சிவன் விக்னேஷ் அவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.