Frozen Ice In Moon ISRO's Finds : நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள்
நிலவின் பள்ளங்களில் பனிக்கட்டி உறைந்திருப்பதை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான (இஸ்ரோ) உறுதி (Frozen Ice In Moon ISRO’s Finds) செய்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 விண்கலத்தை நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சி செய்வதற்காக தயார் செய்தது. இந்த விண்கலம் ஜூலை 14 அன்று விண்ணில் ஏவப்பட்டது. தொடர்ந்து பல்வேறு கட்ட பயணங்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 23 அன்று ‘விக்ரம்’ லேண்டர் பாகம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. பின்னர் அதிலிருந்து ரோவர் வாகனமும் நிலவின் தரைப்பகுதிக்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு, லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தபடியும், ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்றும் 14 நாட்கள் ஆய்வு செய்து, பல்வேறு அரிய தகவல்களையும் படங்களையும் திருப்பி அனுப்பியது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சந்திரயான் 3 விண்கலம் மூலம் நிலவை ஆய்வு செய்த இஸ்ரோ, அதைத் தொடர்ந்து ஆதித்யா விண்கலம் மூலம் சூரியனை ஆய்வு செய்து வருகிறது. அடுத்ததாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை இஸ்ரோ கடுமையாக செய்து வருகிறது. இதற்கான பணிகள் ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிரதமர் மோடி சமீபத்தில் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி வீரர்களை அறிமுகப்படுத்தினார். இந்த நிலையில் நிலவில் உள்ள பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் உறைந்து இருப்பதை (Frozen Ice In Moon ISRO’s Finds) இஸ்ரோ கண்டறிந்துள்ளது.
Frozen Ice In Moon ISRO's Finds - நிலவின் துருவப் பகுதிகளில் பனிக்கட்டிகள் :
இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பு நிலவரப்படி, ஐஐடி கான்பூர், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் மற்றும் ஐஐடி (ஐஎஸ்எம்) தன்பாத் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இஸ்ரோவின் விண்வெளி பயன்பாட்டு மையத்துடன் இணைந்து இது தொடர்பாக ஆய்வு நடத்தி வந்தனர். இதில் நிலவின் துருவப் பகுதிகளில் பனிக்கட்டிகள் உறைந்து கிடப்பதை ஆய்வாளர்கள் உறுதி (Frozen Ice In Moon ISRO’s Finds) செய்துள்ளனர். நிலவின் முதல் இரண்டு மீட்டர்களில் உள்ள பனிக்கட்டியின் அளவு இரு துருவங்களின் மேற்பரப்பில் இருப்பதை விட 5 முதல் 8 மடங்கு பெரியதாகும். நிலவில் துளைகளை துளைத்து அவற்றின் மாதிரிகளை பகுப்பாய்வு செய்ய வேண்டும். இது எதிர்கால நிலவு பயணங்களுக்கு உதவியாக இருக்கும். மேலும், வட துருவத்தில் உள்ள நீர் பனியின் அளவு தென் துருவத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இது தொடர்பாக ஆய்வுகள் நடந்து வருகின்றன.
Latest Slideshows
-
Nandini's T20 World Cup Sponsor - சர்வதேச அரங்கில் Nandini Brand-டை அறிமுகம் செய்ய நல்ல வாய்ப்பு
-
மே 21 அன்று இந்தியாவில் அறிமுகமாகும் Infinix GT 20 Pro
-
Aditya Captures Impact Of Solar Storm : சூரியப் புயலின் தரவுகளை படம் பிடித்த ஆதித்யா எல்-1
-
Purchase Deed Change At Just Rs 1000 : சொத்து வாங்குவோர் மற்றும் விற்போர் மகிழ்ச்சி
-
Rajinikanth Congratulated Vijayakanth : விஜயகாந்தை போல் இனி யாரையும் பார்க்க முடியாது
-
இந்தியாவின் முதல் திறந்த மூல பன்மொழி மாடல் Pragna-1B அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
-
Shashank Singh, சூர்யகுமார் யாதவ் போன்று வருவார் | ஆகாஷ் சோப்ரா கணிப்பு
-
Madras High Court Recruitment 2024 : சென்னை ஐ-கோர்ட்டில் வேலைவாய்ப்பு
-
Interesting Facts About Fish : மீன்களைப் பற்றிய சில சுவாரசியமான உண்மைகள்
-
Bitter Gourd Benefits : பாகற்காயில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்