மத்திய அரசு New EV Policy அறிவித்துள்ளது
New EV Policy - அதிரடி வரிகுறைப்பு :
இந்தியாவில் எலக்ட்ரிக் இரு சக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்களுக்கான தேவை ஆனது அதிகரித்து வருவதால் மின்சார வாகன உற்பத்தியை ஊக்கப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. மத்திய அரசு இந்தியாவை உலகின் முன்னணி எலக்ட்ரிக் வாகன உற்பத்தி Hub ஆக மாற்றுவதற்கான இலக்குடன் மற்றும் டெஸ்லா போன்ற வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவில் உற்பத்தி செய்யவும் மற்றும் முதலீடு செய்யவும், வெளிநாட்டு நிறுவனங்களின் அதிநவீன உற்பத்தி தொழில்நுட்பத்தையும் இந்தியாவுக்குக் கொண்டு வரவும் கவர்ந்திழுக்கும் நோக்கத்தில் புதிய எலக்ட்ரிக் வாகன கொள்கையை (New EV Policy) கொண்டு வந்துள்ளது.
மத்திய அரசு ஆனது டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் கேட்ட வரி சலுகையை விட அதிகமாக கொடுத்துள்ளது. இந்தியாவில் மின்சார கார்களை உற்பத்தி செய்வதற்கான ஆலையை அமைக்க முன்மொழிந்துள்ள டெஸ்லா இந்தப் புதிய அதிரடி வரிகுறைப்பு கொள்கையினால் அதிக பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புதிய எலக்ட்ரிக் வாகன கொள்கை (New EV Policy) ஆனது இந்திய மக்கள் வெளிநாட்டு மின்சார வாகனங்களை வாங்க ஊக்குவிக்கும். இதன் மூலம், இந்தியாவின் “ஆத்மநிர்பார் பாரத்” திட்டம் ஆனது கூடுதல் வலிமை பெறும்.
எலக்ட்ரிக் வாகன வரிச் சலுகையைப் பெற மத்திய அரசு வைத்துள்ள சில பல முக்கிய கண்டிஷன்கள் :
மத்திய அரசின் புதிய எலக்ட்ரிக் வாகன வரிச் சலுகையைப் பெற வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்தியாவில் குறைந்தது,
- 500 மில்லியன் டாலர் அதாவது 4,150 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய வேண்டும்.
- அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்புகள் எதுவும் இல்லை.
- முதலீடு செய்யும் நிறுவனங்கள் மூன்று ஆண்டுகளுக்குள் உற்பத்தி தொழிற்சாலையை இந்தியாவில் கட்டி அமைத்து உற்பத்தியை துவங்கி இருக்க வேண்டும்.
இவற்றை பின்பற்றும் பட்சத்தில் தான் கார்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை ஆனது வழங்கப்படும். இந்த மத்திய அரசின் முதலீட்டு உறுதி மற்றும் குறைந்தபட்ச முதலீடு நிபந்தனைகளைப் பின்பற்றாத சூழ்நிலையில், நிறுவனங்கள் மீது வங்கி கேரண்ட்டி மூலம் (New EV Policy) தகுந்த நடவடிக்கைகள் ஆனது எடுக்கப்படும்.
Latest Slideshows
-
World Heritage Sites in 2024: அதிக உலக பாரம்பரிய தளங்கள் உள்ள நாடுகள் பட்டியல்
-
Powerful Solar Storm: பூமியை தாக்கிய சக்தி வாய்ந்த காந்த புயல் !
-
Drones To Monitor Pakistan : பாகிஸ்தானை கண்காணிக்க பதிண்டா தளத்தில் ஆளில்லா விமானங்கள்
-
Speedy Growth Of Chennai Real Estate In 2024 : 2024ல் சென்னை ரியல் எஸ்டேட்டின் வேகமாக வளர்ச்சிக்கு அச்சாரமாக உள்ள இடங்கள்
-
Samsung Galaxy F55 5G Launch : Samsung Galaxy F55 5G - மே 17 அன்று அறிமுகம்
-
மும்பையில் 3,50,000 சதுர அடி கூட்டு கட்டுமானம் - Siroya Corp Development Plan
-
Chennai Real Estate Development : பெரிய முதலீட்டாளர்களின் நுழைவை அறிவித்தது
-
Founder Adani's Success Story : Adani Group Founder & Chairman திரு.அதானியின் வெற்றிக் கதை
-
Steel Cutting Ceremony Of Cadet Training Ship : காட்டுப்பள்ளியில் 3rd Cadet-Training Ship-ன் Steel-Cutting Ceremony
-
வேலை மாறினால் PF பணம் தானாக மாற்றப்படும் - New EPFO Rule