Sugar Patient Food List In Tamil: சர்க்கரை நோய் உள்ளவர்கள் உண்ணவேண்டிய உணவு முறைகள்

சர்க்கரை நோயின் போது உப்பு மற்றும் சர்க்கரை ஆகிவற்றை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். ருசியான உணவை கண்ணால் மட்டுமே பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படி இல்லை. சர்க்கரை நோயைக் கண்டறிந்த பிறகு, அதை முதலில் கட்டுப்படுத்த வேண்டும், பின்னர் சில முக்கியமான விஷயங்களைப் பின்பற்ற வேண்டும். இதை உங்கள் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தால், மற்றவர்களைப் போல நீங்களும் மகிழ்ச்சியுடன் உணவை அனுபவிக்க முடியும். இதற்கு தினசரி உடற்பயிற்சி மற்றும் உணவு முறையை மாற்றி கொண்டாலே போதும். உணவு முறையில் என்ன மாதிரியான உணவை அன்றாடம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தற்போது பார்ப்போம்.

சர்க்கரை நோய் உணவு அட்டவணை

பாகற்காய்

பாகற்காய் கீரையை விட அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து மற்றும் போதுமான அளவு பீட்டாகரோட்டின் உள்ளது. பாகற்காயானது நமது உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரித்து, சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

நார்ச்சத்து உணவுகள்

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் வயிறு மற்றும் சிறுகுடலில் கார்போஹைட்ரேட்டுகள் குளுக்கோஸாக மாற்றப்படும் விகிதத்தை குறைக்கிறது. இதனால், உடலில் அதிகப்படியான சர்க்கரை மற்றும் கொழுப்பு சேர்வது தடுக்கப்படுகிறது. இரத்த சர்க்கரை அளவு குறைகிறது. எனவே, நார்ச்சத்து நிறைந்த கீரைகள், பச்சை காய்கறிகள், முட்டைக்கோஸ், ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி, எலுமிச்சை, புரோகோலி, தக்காளி, பீன்ஸ், வெண்டைக்காய், காலிஃபிளவர், மாதுளை, கொய்யாப்பழம், பூண்டு, கேரட், வெள்ளரி ஆகியவற்றை போதுமான அளவு எடுத்துக் கொள்ளலாம்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் நிறைந்த பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி ஆகிய பழங்களில் வைட்டமின் C நிறைந்துள்ளது. இது சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உடல் வேகமாக குணமடைய உதவுகிறது. எலும்பு முறிவுகள் விரைவில் குணமாகும். தொற்றுநோயைத் தடுக்கிறது. உடல் அசதியைக் குறைத்து உடலுக்கு ஆற்றலைத் தருகிறது. இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் வரும்.

நாவல் பழம்

நாவல் பழத்தில் பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின் B ஆகிய தாதுக்கள் நிறைந்துள்ளது. நாவல் பழத்தில் உள்ள இரும்புச்சத்து இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. நாவல் பழக் கொட்டையை பொடி செய்து வெதுவெதுப்பான நீரில் தினமும் குடித்து வந்தால் சர்க்கரை நோயின் பாதிப்புகள் குணமாகும். சர்க்கரை நோய் கட்டுப்படும். நாவல் பழக் கோட்டையானது கணையத்தை பலப்படுத்துகிறது.

நட்ஸ்

நட்ஸ்சில் வைட்டமின், தாதுக்கள் மற்றும் ஒமேகா 3 ஆகியவை நிறைந்து காணப்படுகிறது. இதில் உள்ள நல்ல கொழுப்பு உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்குவதால், உடலில் நல்ல கொழுப்பு நிறைந்து இதய ஆரோக்கியம் மேம்படும். இன்சுலின் சுரப்பும் சீராகிறது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது.

பீன்ஸ்

பீன்ஸ் வகைகளில் அதிக அளவு பொட்டாசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, மெக்னீசியம் நிறைந்துள்ளது. பீன்ஸ் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஆற்றலை கொடுக்கிறது. இது செரிமானத்தை சீராக்கி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும்.

பட்டை

பட்டை வளர்சிதை மாற்றத்தின் மூலம் உடலில் வெப்பத்தை உருவாக்குகிறது. இதனால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைகிறது. பட்டையானது உடலுக்கு இயற்கை முறையில் இன்சுலினை அதிகரிக்கசெய்கிறது. சர்க்கரை நோயாளிகள் பட்டையை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை சமப்படுத்த உதவும்.

வெந்தயம்

வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து ஆகிய சத்துக்கள் உள்ளன. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த பொடியை தண்ணீர் அல்லது மோர் கலந்து தினமும் குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். மேலும் இவற்றில் சோடியம், இரும்பு,தயமின், நிகோட்டின், பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளது. இவை உடலை குளிர்விக்கவும், உடலை சமநிலைப்படுத்தவும் வெந்தயம் பயன்படுகிறது. வெந்தயத்தில் வைட்டமின் A இருப்பதால், கண்பார்வையை தடுக்கிறது.

Routine Sugar Patient Food List In Tamil

காலை உணவு

* இட்லி

* கோதுமை உப்புமா

* சப்பாத்தி

மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளில் ஏதேனும் ஒன்றைச் சாப்பிடலாம். இவற்றுடன் பருப்பு சாம்பார் அதிகளவும், தேங்காய் மற்றும் வேர்க்கடலை சட்னியை குறைத்துக் கொண்டு புதினா மற்றும் கொத்தமல்லி சட்னியை அதிகளவு சேர்த்துக்கொள்ளவும். மேலும் இவற்றுடன் காலையில் 2 முட்டைகளை சாப்பிடலாம். இவற்றை வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே சாப்பிட வேண்டும்.

மதிய உணவு

* வேகவைத்து வடித்த சாதம் / சாம்பார்

* பொரியல்

* கீரை / காய்கறி சால்ட்

கொடுக்கப்பட்டுள்ள இந்த உணவு முறைகளை மதிய உணவாக எடுத்துக்கொள்ளலாம் இவற்றில் அசைவம் சாப்பிடுபவர்கள் சாம்பாருக்கு பதிலாக மீன் குழம்பை சேர்த்துக்கொள்ளலாம்.

இரவு உணவு

* சப்பாத்தி

* வேகவைத்த காய்கறி

* கோதுமை ரவை உப்புமா ஆகிய உணவுகளை இரவு உணவாக உண்ணலாம்.

இவற்றை உண்ண பிறகு அரை மணி நேரம் கழித்து சூடான ஒரு கப் பால் அருந்தலாம். மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை தினசரி பின்பற்றி வந்தால் சர்க்கரை நோய் போன்ற நோய்களில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.

Latest Slideshows

Leave a Reply