Chennai Ford Factory Reopening : Ford நிறுவனம் அதன் சென்னை தொழிற்சாலையை மீண்டும் திறக்க பரிசீலித்து வருகிறது
இந்திய அரசின் புதிய மின்சார வாகனக் கொள்கை (EV Policy) அறிவிப்பானது தொடர்ந்து உலகளாவிய வாகன உற்பத்தியாளர்களின் நுழைவுக்கு வழி வகுக்கிறது. அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான Ford மோட்டார் நிறுவனத்தின் சர்வதேச சந்தை குழுமத்தின் தலைவர் கே.ஹார்ட் தமிழக அரசுடன் தனது Ford மோட்டார் நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி விவாதிக்க சமீபத்தில் இந்தியா வந்திருந்தார்.
மேலும் இந்தியாவில் Ford மோட்டார் நிறுவனத்தின் மறு நுழைவுத் திட்டங்களை மதிப்பீடு செய்துள்ளார். தற்போது Ford மோட்டார் நிறுவனம் ஆனது இந்திய சந்தையில் மீண்டும் நுழைவதற்கான பல திட்டங்களை மதிப்பீடு செய்து சென்னை தொழிற்சாலையை (Chennai Ford Factory Reopening) மீண்டும் திறக்க மற்றும் உற்பத்தியை மீண்டும் தொடங்க பரிசீலித்து வருகின்றது.
Ford நிறுவனத்தின் மறைமலைநகர் தொழிற்சாலை (Chennai Ford Factory Reopening )
Ford மோட்டார் நிறுவனத்தின் இன்டர்நேஷனல் மார்க்கெட்ஸ் குழுமத்தின் தலைவர் கே ஹார்ட் சென்னையை அடுத்துள்ள ஃபோர்டு-ன் மறைமலைநகர் தொழிற்சாலை தொடர்பான நிறுவனத்தின் திட்டங்களை மதிப்பிடுவதற்காக தமிழக அரசு அதிகாரிகளை சந்தித்தார். Ford மோட்டார் நிறுவனத்தின் எதிர்கால இந்தியா திட்டங்களை தமிழக அரசுடன் விவாதித்து கலந்துரையாடினார். மேலும் Ford நிறுவனம் ஆனது இந்தியாவில் மின்சார வாகனத் தளங்களை உள்ளூர்மயமாக்கும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக கூறினார்.
2021 ஆம் ஆண்டில் Ford இன் சென்னை ஆலையில் வாகன உற்பத்திகள் ஆனது முடிவடைந்தது. இந்த 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், Ford மோட்டார் நிறுவனம் ஆனது தொழிற்சாலையை விற்பனை செய்யும் திட்டங்களை நிறுத்திவிட்டு இந்தியாவில் அதன் செயல்பாடுகளை மறுதொடக்கம் செய்ய எதிர்பார்க்கின்றது. சமீபத்திய Ford இன் முன்னேற்றங்கள், உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யக்கூடிய Endeavour-ரின் மறுவெளியீட்டில் தொடங்கி, இந்தியாவில் Ford இன் செயல்பாடுகளை மறுதொடக்கம் செய்ய Ford மோட்டார் நிறுவனம் ஆனது எதிர்பார்க்கிறது என்று தெரிவித்துள்ளது. இது CBU பாதை வழியாக Mustang Mach-E ஐ இந்தியாவிற்கு கொண்டு வரக்கூடும்.
Ford இன் மூத்த தலைவர்கள் தமிழக அரசின் விலைமதிப்பற்ற ஆதரவிற்கு தங்களது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தனர். தங்களது தலைமையகத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 2,500-3,000 கூடுதல் வேலைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். Ford நிறுவனம் அதன் தொழிற்சாலையை விற்பனை செய்யும் திட்டங்களை நிறுத்திவிட்டு, மீண்டும் வருவதற்கான வசதியை தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. சென்னை தொழிற்சாலையை மீண்டும் திறக்க Ford மோட்டார் நிறுவனம் (Chennai Ford Factory Reopening) ஆனது பரிசீலித்து வருகிறது.
Latest Slideshows
-
World Heritage Sites in 2024: அதிக உலக பாரம்பரிய தளங்கள் உள்ள நாடுகள் பட்டியல்
-
Powerful Solar Storm: பூமியை தாக்கிய சக்தி வாய்ந்த காந்த புயல் !
-
Drones To Monitor Pakistan : பாகிஸ்தானை கண்காணிக்க பதிண்டா தளத்தில் ஆளில்லா விமானங்கள்
-
Speedy Growth Of Chennai Real Estate In 2024 : 2024ல் சென்னை ரியல் எஸ்டேட்டின் வேகமாக வளர்ச்சிக்கு அச்சாரமாக உள்ள இடங்கள்
-
Samsung Galaxy F55 5G Launch : Samsung Galaxy F55 5G - மே 17 அன்று அறிமுகம்
-
மும்பையில் 3,50,000 சதுர அடி கூட்டு கட்டுமானம் - Siroya Corp Development Plan
-
Chennai Real Estate Development : பெரிய முதலீட்டாளர்களின் நுழைவை அறிவித்தது
-
Founder Adani's Success Story : Adani Group Founder & Chairman திரு.அதானியின் வெற்றிக் கதை
-
Steel Cutting Ceremony Of Cadet Training Ship : காட்டுப்பள்ளியில் 3rd Cadet-Training Ship-ன் Steel-Cutting Ceremony
-
வேலை மாறினால் PF பணம் தானாக மாற்றப்படும் - New EPFO Rule