Peterson Talks About Pandya Captaincy : ஹர்திக் பாண்டியா சிரிப்பது போல் நடிக்கிறார்
மும்பை :
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பெரிய தவறுகளை செய்வதால், அந்த அணி தொடர்ந்து தோல்வியை தழுவுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் (Peterson Talks About Pandya Captaincy) தெரிவித்துள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 29வது லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 206 ரன்கள் குவித்தது. இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
Peterson Talks About Pandya Captaincy :
மும்பை இந்தியன்ஸ் அணியின் கடைசி ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா, கடைசி நான்கு பந்துகளில் மூன்று ஹாட்ரிக் சிக்ஸர்களை கொடுத்தார். இது ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷிப்பை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் கடுமையாக (Peterson Talks About Pandya Captaincy) விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா செய்தது நிச்சயம் தவறு. ஹர்திக் பாண்டியா போட்டி தொடங்குவதற்கு 5 மணி நேரம் முன்னதாக அணியை அழைத்து ஆலோசனை கூட்டத்தை நடத்துவார் என்று நினைக்கிறேன். அதில் அவர் பிளான் ஏ கொண்டு வருவார் எனத் தெரிந்தாலும் பிளான் பி-யை நாடாமல் தொடர்ந்து பிளானை கடைபிடித்து வருகிறார்.
இன்றைய ஆட்டத்தில் பும்ராவை முதல் சில ஓவர்களை வீச விட்டுவிட்டு கடைசி ஓவர்களில் பும்ராவை மீண்டும் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரை மிகவும் தவறாக வீசினார். அதுமட்டுமின்றி, முஹம்மது நபி மூன்று ஓவர்கள் வீசி 19 ரன்களை விட்டுக்கொடுத்தார். ஆனால் அந்த அணியில் இடம் பெற்றுள்ள ஷ்ரேயாஸ் கோபால் ஒரு ஓவர் வீசி 9 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஒவ்வொரு வேகப்பந்து வீச்சாளரும் ஒரு ஓவரில் 20 ரன்களுக்கு மேல் கொடுக்கும்போது, ஹர்திக் பாண்டியா ஏன் ஸ்பின்னருக்கு கூடுதல் ஓவர் கொடுக்கக் கூடாது? நாங்கள் கிரிக்கெட் வர்ணனை செய்யும் போது ஹர்திக் ஏன் இந்த தவறை செய்கிறார் என்று பேசிக்கொண்டே இருந்தோம்.
ஹர்திக் பாண்டியா :
ஆட்டம் முன்னேறும்போது எதிரணியின் ரன் ரேட்டைக் குறைக்க சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேறி நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாட வந்துள்ளார் ஹர்திக் பாண்டியா. நீண்ட காலமாக கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்ததால், அது அவரது ஆட்டத்தை பாதித்தது என்று நினைக்கிறேன். மேலும் ஹர்திக் பாண்டியா அடிக்கடி தேவையில்லாமல் சிரிப்பார். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று நடிக்கிறார். ஆனால் பீட்டர்சன், ஹர்திக் பாண்டியா நிச்சயமாக மகிழ்ச்சியாக இல்லை என்று கூறினார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், தோனியின் மூன்று சிக்ஸர்களே இந்த தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.
பொல்லார்ட் :
மேலும் இந்த ஓவரை மோசமாக வீசிய ஹர்திக் பாண்டியா மீது பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கு ஹர்திக் பாண்டியா காரணம் இல்லை என மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜாம்பவான் பொல்லார்ட் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஹர்திக் பாண்டியாவை விமர்சித்தது தவறு. கிரிக்கெட் என்பது ஒரு அணியாக இணைந்து விளையாடுவது என்பதை மறந்துவிடக் கூடாது. ஹர்திக் பாண்டியா நம்பிக்கையுடன் இருக்கிறார். அவர் ஒரு அணியை நன்றாக வழிநடத்துகிறார். ஒவ்வொரு நாளும் அவர் அணிக்காக எவ்வளவு கடினமாக உழைக்கிறார் என்பதை நான் என் கண்களால் பார்க்கிறேன். இன்னும் ஆறு வாரங்களில் ஹர்திக் பாண்டியா இந்தியாவுக்காக விளையாடப் போகிறார் என்பதை மறந்துவிடக் கூடாது.
நாங்கள் அனைவரும் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக நிற்கிறோம். அவர் அணிக்காக சிறப்பாக விளையாட வாழ்த்துவோம். பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் ஹர்திக் பாண்டியா முதலிடத்தில் உள்ளார். இந்த தொடரில் அவர் சிறப்பாக செயல்படுவார் என உறுதியாக நம்புகிறேன். அப்போது நான் அமைதியாக அமர்ந்து ஹர்திக் பாண்டியாவை அனைவரும் புகழ்வதைக் கேட்டுக் கொண்டிருப்பேன். வயதாகும்போது நீங்களும் மாற வேண்டும். இளம் வயதில் சில விஷயங்களை உங்கள் பாணியில் செய்வீர்கள். ஆனால் நீங்கள் வயதாகும்போது அதிக பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். ஹர்திக் பாண்டியா மாறுவதை என்னால் பார்க்க முடிகிறது.
தோனிக்காக எந்த திட்டத்தை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அடிக்க நினைத்தால் கண்டிப்பாக அந்த மூன்று சிக்ஸர்களை அடித்திருப்பார். ஹர்திக் பாண்டியா மட்டுமல்ல, அந்த ஓவரை யாராவது வீசினால் தோனி 20 ரன்கள் எடுத்திருப்பார். எம்.எஸ் தோனி ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர். அவர் எப்போதும் கிரிக்கெட் மைதானத்தில் விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தோனியின் மூன்று சிக்ஸர்களால் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் நாங்கள் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது. கிரிக்கெட்டில் கண்ணுக்கு எட்டியதை விட நிறைய இருக்கிறது. நாம் எங்கு செல்கிறோம் என்பதை ஆய்வு செய்து, அதிலிருந்து மீள்வது எப்படி என்று சிந்திப்போம். உறுதியான அணியாக மீண்டும் வருவோம். விராட் கோலி, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, தோனி என எந்த திட்டமாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அதைச் சரியாகச் செயல்படுத்துகிறோமா இல்லையா என்பதில் தான் சிக்கல் உள்ளது என்றார் பொல்லார்ட்.
Latest Slideshows
-
சென்னையில் விரைவில் LNG Gas Powered Buses சோதனை ஓட்டம்
-
World's Largest Telecommunications Company ஆக ரிலையன்ஸ் ஜியோ மகுடம் சூடியுள்ளது
-
Green Signal For Tata's Rs 91000 Crore Project-ற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
-
ஸ்மார்ட்போனின் டீஸர் Flipkart Landing பக்கத்தில் Nothing Phone 2A Introduction
-
World Cup Team : டி20 உலக கோப்பை அணியில் இடம்பெறப் போவது யார்?
-
RCB Easy Win : குஜராத்தை ஊதி தள்ளிய பெங்களூரு
-
Guinness Record Of Madurai Youth : மதுரை இளைஞர் 30 வினாடிகளில் புதிய கின்னஸ் சாதனை
-
வேகமாக வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் தோனியின் Dhoni Entertainment Company
-
India-Oman Trade Agreement : இந்தியா ஓமானுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது
-
Miss Universe At 60 Yrs : வரலாற்றில் முதல்முறையாக 60 வயதில் Miss Universe வெற்றி