Green Signal For Tata's Rs 91000 Crore Project-ற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
Cabinet Gives Green Signal To Tata’s Rs 91,000 Crore Chip Foundry Project :
இந்தியா ஆனது உலகின் பிற முக்கிய பொருளாதாரங்களுக்கு ஏற்ப தனது வணிக மற்றும் மூலோபாய நலன்களைப் பாதுகாப்பதற்காக சிப் அசெம்பிளி மற்றும் உற்பத்தியை உள்ளூர்மயமாக்குவதற்கு கடந்த சில ஆண்டுகளாக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ரூ.91,000 கோடி சிப் ஃபவுண்டரி திட்டத்திற்கு அமைச்சரவை பச்சை விளக்கு (Green Signal For Tata's Rs 91000 Crore Project) :
கடந்த 25/04/2024 அன்று இந்தியாவின் நீண்டகால லட்சியத்திற்கு வழி வகுக்கும் Tata குழுமத்தின் 91,000 கோடி முதலீட்டு Semiconductor ஃபவுண்டரியை அமைக்கும் திட்டத்திற்கு (Green Signal For Tata’s Rs 91000 Crore Project) ஊக்கத்தொகை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. இது ஆண்டுக்கு 300 கோடி சில்லுகளை உற்பத்தி செய்யும். உயர் செயல்திறன் சில்லுகளை ஃபவுண்டரி 28, 50, 55, மற்றும் 90 மற்றும் 110 நானோமீட்டர் வகைகளில் உற்பத்தி செய்யும்.
இந்த உற்பத்தி ஆனது உயர்-பவர் கம்ப்யூட், மின்சார வாகனங்கள், டெலிகாம், பாதுகாப்பு, நுகர்வோர் மின்னணுவியல், ஆட்டோமொபைல் மற்றும் பவர் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றின் தேவையை பூர்த்தி செய்யும். ஃபவுண்டரி யூனிட்டை அமைப்பதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதால், இந்தியா இப்போது செமிகண்டக்டர் சந்தையில் ஒரு தீவிர வீரராக உலகளவில் பார்க்கப்படும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவ் தெரிவித்து உள்ளார்.
Powerchip Semiconductor Manufacturing Corporation (PSMC) உடன் கூட்டு முயற்சி :
டாடா குழும நிறுவனமான Tata Electronics ஆனது தைவானின் சிப் தயாரிப்பு நிறுவனமான Powerchip Semiconductor Manufacturing Corporation (PSMC) உடன் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. டாடா குழுமத்தின் டாடா செமிகண்டக்டர் அசெம்ப்ளி அண்ட் டெஸ்டில் (TSAT) இருந்து அசெம்பிளி, டெஸ்டிங், மார்க்கிங் மற்றும் பேக்கேஜிங் (ATMP) யூனிட்டை அசாமில் அமைப்பதற்கான இரண்டு முன்மொழிவுகளுக்கும், CG Power-Renesas இணைப்பிலிருந்து ஒன்றும், மோரிகானில் தங்கள் அலகுகளை சனந்த் குஜராத்தில் அமைக்கும் இரண்டு திட்டங்களுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. TSAT திட்டம் ரூ.27,000 கோடி ஆகும். CG Power-Renesas திட்டம் ரூ.7,600 கோடி ஆகும். ஒட்டுமொத்தமாக 1,26,000 கோடி முதலீட்டை உள்ளடக்கிய மூன்று திட்டங்களில் ரூ.47,704 கோடியை மானியங்கள் அடிப்படையில் மத்திய அரசு மேற்கொள்ளும். மொத்தத்தில் 26,000 மேம்பட்ட தொழில்நுட்ப வேலைகளையும் ஒரு லட்சம் மறைமுக வேலைகளையும் உருவாக்கும்.
PSMC குழுமத் தலைவர் ஃபிராங்க் ஹுவாங் உரை :
PSMC குழுமத் தலைவர் ஃபிராங்க் ஹுவாங், “இந்திய நாட்டில் பல துறைகளில் முன்னோடியாக இருக்கும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ள டாடா குழுமத்தின் செமிகண்டக்டர் ஃபேப்ரிக்கேஷனில் எங்கள் PSMC குழு நுழைவு பெருமை சேர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தியா செமிகண்டக்டர் உற்பத்தித் துறையில் சரியான நேரத்தில் நுழைந்துள்ளது” என்று கூறினார்.
Latest Slideshows
-
AIS Report - இந்திய வருமான வரிதுறையின் (IT) Latest Update
-
Increasing AI Growth : வியத்தகு AI பயன்பாடு வளர்ச்சி - TEAMLEASE DIGITAL Report
-
Crude Oil Imports : இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிப்பு ஏற்படும்
-
Profit Record Of Fuel Companies In 2023-24 : 2023-24-ஆண்டு Profit Record Rs.81,000 Cr
-
Gambhir Support Pandya : ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவாக பேசிய கவுதம் கம்பீர்
-
India New Coach : புதிய பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்படுவாரா ஸ்டீபன் பிளெமிங்?
-
Instagram Influencer Orry ஒரு செல்ஃபிக்கு ரூ.25 லட்சம் பெறுகிறார்
-
Whatsapp ரூட்டில் EMIS Website - தமிழக பள்ளிக் கல்வித்துறை Data
-
பெங்களூர் சிக்னல்களில் ATCS
-
World Heritage Sites in 2024: அதிக உலக பாரம்பரிய தளங்கள் உள்ள நாடுகள் பட்டியல்