HCL Founder Shiv Nadar : இந்தியாவின் சிறந்த தொழில் முனைவோர் & 3வது பெரிய பணக்காரர் Shiv Nadar
Shiv Nadar தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து, படித்து வட இந்தியாவில் பிஸ்னஸ் செய்து சாதித்த மாபெரும் தமிழ் தொழிலதிபர். தற்போது 60 நாடுகளில் பிஸ்னஸ் செய்து வருகிறார். வாழ்க்கையில் பிடிப்பும், விடாமுயற்சியும் இருந்தால் எதையும் சாத்திக்க முடியும் என்பதற்கு இவர் ஓர் முக்கியமான உதாரணம். தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இவர் கோயம்புத்தூரில் உள்ள PSG College Of Technology-யில் இஞ்சினியரிங் பட்டப்படிப்பை முடித்தவர்.
HCL Founder Shiv Nadar - தொழில் பயணம் :
வால்சந்த் குரூப்பில் 1967 ஆம் ஆண்டில் ஷிவ் நாடார் முதன் முதலில் வேலைக்குச் சேர்ந்தார். ஷிவ் நாடார் 1976 ஆம் ஆண்டில் HCL நிறுவனத்தை (HCL Founder Shiv Nadar) ரூ.1,87,000 முதலீட்டில் தொடங்கினார். தனது வீட்டு கேராஜில் ஷிவ் நாடார் தனது ஐந்து நண்பர்களுடன் சேர்ந்து HCL நிறுவனத்தை தொடங்கினார். ஷிவ் நாடார் ஆரம்பித்த HCL நிறுவனம் தொடக்கத்தில் கால்குலேட்டர்கள் மற்றும் மைக்ரோ பிராசஸர்களை மட்டுமே தயாரித்தது. அதன் பின்னர் HCL நிறுவனம் ஆனது இந்திய நாட்டின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்தது. HCL நிறுவனத்தின் தற்போதைய ஆண்டு வருவாய் 11.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அவர் HCL நிறுவனத்தை 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வகித்து வந்தார். மத்திய அரசு 2008 ஆம் ஆண்டில் ஷிவ் நாடார் IT துறையில் ஆற்றிய பங்கைப் பாராட்டும் விதமாக அவருக்கு பத்ம பூஷண் விருதை வழங்கி கௌரவித்தது.
பின்னர் அவர் நிறுவனத்தின் தலைவர் என்ற பொறுப்பை தனது மகள் ரோஷணி நாடாருக்கு விட்டுக் கொடுத்தார். ரோஷிணி நாடார் இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரப் பெண்மணிகளில் ஒருவர் ஆவார். இவரது நிர்வாகத்தில் இப்போது இந்த நிறுவனம் 60 நாடுகளுக்கும் மேல் கிளை விரித்து 2,22,000 ஊழியர்களைக் கொண்டுள்ளது. ரோஷிணி நாடாரின் சொத்து மதிப்பு ரூ.84,330 கோடி ஆகும்.
சமூக தொண்டில் ஆர்வம் :
நாட்டின் மிகப்பெரிய நன்கொடையாளர்களில் ஒருவராக ஷிவ் நாடார் (HCL Founder Shiv Nadar) உள்ளார். இந்தியாவின் பெரும் தொழிலதிபராக இருப்பது மட்டும் அல்லாமல் அவர் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஷிவ் நாடார் பவுண்டேனுக்கு நன்கொடையாக அளித்துள்ளார். ஷிவ் நாடார் இதுவரை ஒரு நாளைக்கு ரூ.3 கோடி என்ற கணக்கில் ரூ.1161 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகவும் தாராளமான மனிதர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். டெல்லியின் டாப் பணக்காரரும் நாட்டின் மூன்றாவது பெரிய பணக்காரரும் ஆன ஷிவ் நாடாரின் நிகர சொத்து மதிப்பு போர்ப்ஸ் கணிப்பின்படி ரூ.2,43,746.70 கோடி ஆகும். தற்போது HCL நிறுவனம் வெற்றிகரமாக செயல்படுவதற்குக் காரணம் ஷிவ் நாடாரின் கடுமையான உழைப்பும் மற்றும் அவரது மகள் ரோஷணி நாடாரின் நிர்வாக திறமையும் ஆகும்.
Latest Slideshows
-
சென்னையில் விரைவில் LNG Gas Powered Buses சோதனை ஓட்டம்
-
World's Largest Telecommunications Company ஆக ரிலையன்ஸ் ஜியோ மகுடம் சூடியுள்ளது
-
Green Signal For Tata's Rs 91000 Crore Project-ற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
-
ஸ்மார்ட்போனின் டீஸர் Flipkart Landing பக்கத்தில் Nothing Phone 2A Introduction
-
World Cup Team : டி20 உலக கோப்பை அணியில் இடம்பெறப் போவது யார்?
-
RCB Easy Win : குஜராத்தை ஊதி தள்ளிய பெங்களூரு
-
Guinness Record Of Madurai Youth : மதுரை இளைஞர் 30 வினாடிகளில் புதிய கின்னஸ் சாதனை
-
வேகமாக வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் தோனியின் Dhoni Entertainment Company
-
India-Oman Trade Agreement : இந்தியா ஓமானுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது
-
Miss Universe At 60 Yrs : வரலாற்றில் முதல்முறையாக 60 வயதில் Miss Universe வெற்றி