Will Jacks : பிளே ஆப் சுற்றுக்கு செல்ல இன்னும் வாய்ப்புள்ளது

ஹைதராபாத் :

ஆர்சிபி விளையாடும் 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என நட்சத்திர வீரர் Will Jacks நம்பிக்கை தெரிவித்துள்ளார். 16 ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பையை வெல்ல ஆர்சிபி போராடி வருகிறது. ஒவ்வொரு முறையும் E Saala Cup நமதே என்று நம்பிக்கையுடன் கூறி வரும் ஆர்சிபி ரசிகர்கள் தொடர்ந்து சோகத்தில் உள்ளனர். இந்நிலையில் 17வது சீசனிலாவது ஆர்சிபி அணி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

RCB அணி :

இந்த சீசனில் RCB அணி 8 ஆட்டங்களில் விளையாடி 7 தோல்வி, 1 வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஆர்சிபி அணி தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோல்வியடைந்துள்ள நிலையில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியுடன் விளையாடவுள்ளது.

Will Jacks :

இதற்காக ஆர்சிபி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஹைதராபாத் அணியின் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளதால் இந்த போட்டியிலும் அதிக ரன்களை எதிர்பார்க்கலாம். இந்நிலையில் ஆர்சிபி வீரர் Will Jacks கூறுகையில், தற்போது ஆர்சிபி அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களும் பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளோம்.

கடைசிப் போட்டியில் அது சரியாகச் செயல்பட்டது. அடுத்த போட்டிகளில் அதை செய்ய விரும்புகிறோம். இந்த நிலையில் இருந்தும் ஆர்சிபி அணி தொடர்ந்து சில போட்டிகளில் வெற்றி பெற்றால், பிளே ஆஃப் சுற்றுக்கு வாய்ப்புள்ளது என நம்புகிறோம். எப்போது என்ன நடக்கும் என்று யாராலும் கூற முடியாது என்றார். 2016 இல், பிளேஆஃப்களுக்கு தகுதி பெற RCB தனது கடைசி 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். அப்போதைய பெங்களூரு அணி அனைத்து போட்டிகளையும் வென்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி அதிர்ச்சி கொடுத்தது. RCB அணி ஏற்கனவே சரியான விளையாடும் லெவனைக் கண்டுபிடித்துள்ளதால், அது வெற்றிபெற வாய்ப்புள்ளது.

Latest Slideshows

Leave a Reply