News
Interesting Facts About Bears : கரடிகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்
Interesting Facts About Bears :
- கரடிகள் பெரும்பாலும் இறைச்சி மற்றும் மீன் ஆகியவற்றை உண்டு உயிர் வாழ்கின்றன. சில வகையான கரடிகள் மட்டுமே தாவரங்களையும் பூச்சிகளையும் உண்ணும்.
- உலகில் 8 வகையான கரடிகள் உள்ளன.
- குளிர்காலத்தில் கரடிகள் அதிக நேரம் தூங்கும்.
- கருப்பு கரடிகள் மணிக்கு 35 மைல் வேகத்தில் ஓடக்கூடியவை.
- கரடிகளுக்கு 42 பற்கள் உள்ளன.
- துருவ கரடிகள் ஓய்வெடுக்காமல் 100 மைல்கள் வரை நீந்த முடியும்.
- கரடிகள் தங்களுக்குப் பிடித்த மரத்தில் முதுகைத் தேய்ப்பதற்காக நீண்ட தூரம் நடப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளன.
- ஆசியாவில் உள்ள கருப்பு கரடிகள் மற்ற கரடி இனங்களை விட பெரிய காதுகளைக் கொண்டுள்ளன.
- கரையான் புற்றுகளையும், எறும்பு புற்றுகளையும் தோண்டி எடுக்க கரடிகள் இயற்கையாகவே வலுவான நகங்களைக் கொண்டுள்ளன. கரடிகளின் பாதங்கள், நாசித் துவாரங்கள், தாடைகள் ஆகியவை வெவ்வேறு உருவ அமைப்பைக் கொண்டுள்ளன.
- இரவில் வேட்டையாடினாலும், சூரிய ஒளிக்கு முன் அல்லது பின் காலையிலும் மாலையிலும் வேட்டையாடும்.
- இனப்பெருக்க காலத்தில் குறிப்பாக டிசம்பர் மாதத்தில் குட்டிகள் பிறக்கும்.
- இரண்டு வருடங்கள் தன் குட்டிகளை பாதுகாக்கிறது.
Interesting Facts About Bears - கரடியை எதிர்கொண்டால் :
- காடுகளில் மிகவும் ஆபத்தான விலங்கு கரடி என்றால் அது மிகையாகாது. மிகவும் கொடிய விலங்கு கரடி.
- நாம் ஓடினால் கரடி நம்மை விட வேகமாக ஓடும்.
- மரத்தில் ஏறி தப்பிக்க முயன்றால் கரடி நம்மை விட வேகமாக மரத்தில் ஏறும்.
- குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில் குதித்து நீந்தினால், கரடி நம்மை விட வேகமாக நீந்தும்.
இருப்பினும், சில யோசனைகள் உள்ளன :
- கரடிகள் அதிகம் உள்ள பகுதிகளில் தனியாக செல்வது ஆபத்தானது.
- சத்தம் போட்டு, கூச்சலிட்டபடி நகர்ந்தால் கரடி நம்மை விட்டுப் போய்விடும்.
- காட்டுக்குள் தனியே செல்ல வேண்டியிருக்கும் போது கரடி நம்மைப் பார்க்கக் கூடாது. கரடியைக் கண்டால், சத்தம் வராமல் அமைதியாகத் திரும்பி நடக்க வேண்டும். வெகுதூரம் வந்த பிறகு ஓடி தப்பிக்க வேண்டும்.
- ஒருவேளை கரடியும் நாமும் நேருக்கு நேர் இருந்தால், ஆரவாரம் இன்றி சிலை போல அசையாமல் நிற்க வேண்டும். இது கரடி நம்மை விட்டு விலகி செல்ல காரணமாக இருக்கலாம்.
- ஒருவேளை கரடி தாக்க வருவதை உணர்ந்தால், கையை உயர்த்தி, பயமுறுத்தும் சத்தம் எழுப்பினால், கரடி போய்விடும்.
- நாம் இறந்த உடல்கள் போல் செயல்பட வேண்டும். ஏனென்றால் கரடி முதலில் முகம் மற்றும் கழுத்தை தாக்கும்.
- கண்களை இறுக மூடிக்கொண்டு (கண்களை கீழே திருப்பி) கழுத்தில் கைகளை வைத்து, முகத்துக்கு அருகில் உங்கள் முழங்கால்களை கொண்டு வந்து இறந்த பிணமாக படுத்துக் கொள்ளுங்கள்.
- இது ஓரளவிற்கு பலன் தரும், ஒருவேளை கரடி தாக்கினாலும் நீங்கள் உயிர் பிழைப்பதற்கான சிறந்த வாய்ப்பு கிடைக்கும்.
- கரடியுடன் மல்லுக்கட்டி புலியுடன் சண்டையிடும் கொடிய மிருகம் போல நம்மால் ஒருபோதும் உயிர் வாழ முடியாது. ஆனால் இந்த கரடி காடுகளுக்கு இன்றியமையாதது மட்டுமல்ல கரடிகள் பாதுகாக்கப்பட வேண்டிய விலங்கு.
Latest Slideshows
-
Carrom World Cup 2025 : கேரம் உலகக் கோப்பை.. 3 தங்கம் வென்ற சென்னை காசிமேடு கீர்த்தனா.!
-
IndiGo Flight Cancellations : இண்டிகோ முடக்கம் தாக்கம் - ‘கல்லா’ கட்டிய மற்ற விமான நிறுவனங்கள்..!
-
Virat Kohli Latest Record : இந்தியா Vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி- சோதனையிலும் விராட் செய்த மிகப்பெரிய சாதனை
-
Redmi 15C 5G Smartphone Price : பட்ஜெட் விலையில் ரெட்மி 15C ஸ்மார்ட்போன் அறிமுகம் : சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
-
The Architect's Dream Book Review : எழுத்தாளர் நிகில் குமாரின் முதல் நாவல் "தி ஆர்கிடெக்ட்ஸ் ட்ரீம்"
-
Real Estate Market Growth : ரியல் எஸ்டேட் சந்தை 4 ஆண்டுகளில் ரூ.10.8 லட்சம் கோடியாக வளரும்
-
Tere Ishk Mein Movie Review : அழுத்தமான காதல் கதையாக ஈர்க்கிறதா?
-
Nothing Phone 3a Lite Price : சிறந்த அம்சங்களுடன் குறைந்த விலையில் Nothing Phone
-
Blind Women's T20 World Cup: உலகின் முதல் சாம்பியனாக வரலாறு படைத்தது இந்தியா!
-
IQOO 15 Price In India : iQOO 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
This Post Has 4 Comments
I was suggested this website by my cousin. You are incredible! Thanks!
Thanks For Your Valuable Comment
Fantastic beat!
Thanks For Your Valuable Comment