KKR Victory : கொல்கத்தா அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி
KKR Victory :
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய ஆர்சிபி அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரில் (KKR Victory) இருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. RCB இதுவரை 7 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மற்றும் 6 தோல்விகளை மட்டுமே சந்தித்துள்ளது. இதனால் எட்டாவது லீக் ஆட்டத்தில் விளையாடி வரும் ஆர்சிபி, பலம் வாய்ந்த கொல்கத்தா அணியை எதிர்கொண்டது. ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் 48 ரன்களும், சுனில் நரைன் 10 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 16 ரன்களும் எடுத்தனர். கேப்டன் ஸ்ரேயாஸ் 36 பந்துகளில் அரைசதம் அடித்து பெவிலியன் திரும்பினார். எனினும் இறுதியில் ரிங்கு சிங் 16 பந்துகளில் 24 ரன்களும், ஆன்ட்ரூ ரஸ்லே 20 பந்துகளில் 27 ரன்களும், ரமன்தீப் சிங் 9 பந்துகளில் 24 ரன்களும்பெற்று 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 222 ரன்களும் பெற்றனர்.
இதையடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆர்சிபி களம் இறங்கியது. விராட் கோலி அதிரடியாக விளையாடி 7 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்தார். ஆனால், நடுவரின் தவறான முடிவால் ஆட்டம் இழந்தார். வில் ஜாக்ஸ் 32 பந்துகளில் 55 ரன்களும், தொடர் முழுவதும் போராடிய ரஜத் பட்டிதார் இன்றைய ஆட்டத்தில் 23 பந்துகளில் 52 ரன்களும் சேர்த்தனர். இதில் 5 இமாலய சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகள் அடங்கும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேமரூன் கிரீன் 6 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். இந்நிலையில் ஆர்சிபி அணியின் வெற்றிக்காக தினேஷ் கார்த்திக்கும், கரண் சர்மாவும் போராடினர்.
கரண் ஷர்மா :
இந்த சூழலில் கடைசி இரண்டு ஓவர்களில் 31 ரன்கள் எடுக்க வேண்டும். பின்னர் 19வது ஓவரில் தினேஷ் கார்த்திக் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து கடைசி பந்தில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து கடைசி ஓவரில் ஆர்சிபி வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கரண் ஷர்மா, யாரும் எதிர்பார்க்காத வகையில், ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்கை சிக்ஸருக்கு விளாசினார். முதல் பந்திலும், கடைசி ஓவரில் மூன்றாவது மற்றும் நான்காவது பந்திலும் சிக்ஸர் அடித்ததால் ஆர்சிபி வெற்றியை நெருங்கியது. இரண்டு பந்துகளில் மூன்று ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஐந்தாவது பந்தில் கரண் சர்மா கேட்ச் ஆனார். இதன்பின் கடைசி பந்தில் மூன்று ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆர்சிபி வீரர் இரண்டாவது ரன்னை எடுக்க முயன்றபோது ரன் அவுட் ஆனார். இதன் மூலம் ஆர்சிபி அணி ஒரு ரன் வித்தியாசத்தில் (KKR Victory) தோல்வியடைந்துள்ளது. மீதமுள்ள ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று மற்ற அணிக்கு சாதகமாக இருந்தால் மட்டுமே RCB பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
நடராஜன் :
தமிழக வீரர் நடராஜனை கடின உழைப்பாளி என்று ஹைதராபாத் வீரர் புவனேஷ்வர் குமார் பாராட்டினார். டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மொத்தம் 465 ரன்கள் குவிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் நடராஜன் 19 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார். இதுபற்றி ஹைதராபாத் அணியின் புவனேஷ்வர் குமார் கூறுகையில், அணிகள் மிகப்பெரிய இலக்கை துரத்தும்போது, எங்களது பந்துவீச்சும் ரன்களை குவிக்கும் என்பது எங்களுக்கு தெரியும்.
ஆனால் எங்கள் திட்டத்தை சரியாக செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. நடராஜனின் யார்க்கர் பந்துகளை அனைவரும் நன்கு அறிவர். அவர் எப்போதும் அமைதியாக இருக்கிறார். ஆனால் கடின உழைப்பாளி. சில நேரங்களில் அவரது பணி அங்கீகரிக்கப்படாது. அவர் நிச்சயம் மிகப்பெரிய மேட்ச் வின்னர் தான். சில ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் பேட்டிங் சிறப்பாக உள்ளது. அதனால் பந்துவீச்சில் சற்று நிதானமாக இருக்கிறோம். இந்த மைதானத்தில் 200 முதல் 220 ரன்கள் என்பது மிகக் குறைவு என்று நினைத்தோம். அதன்படி பேட்ஸ்மேன்கள் குழுவாக சிறப்பாக விளையாடினர்.
Latest Slideshows
-
CEO Sundar Pichai : Google நிறுவனத்தின் உயர் பதவியில் உள்ள தமிழர்
-
New Force Gurkha Introduced : New 3 Doors மற்றும் 5 Doors Force Gurkha அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது
-
Agni Natchathiram 2024 : நாளை முதல் ஆரம்பமாகிறது அக்னி நட்சத்திரம்
-
Aranmanai 4 Review : அரண்மனை 4 திரைப்படத்தின் திரை விமர்சனம்
-
மிகப் பிரமாண்டமாய் நடந்த Bilt Rewards CEO Ankur Wedding
-
Kubera Nagarjuna First Look : குபேரா படத்தில் நாகார்ஜுனா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
-
Why KL Rahul Dropped : கே.எல் ராகுல் ஏன் உலக கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டார்?
-
Rohit Open Talk About Pandya : பாண்டியாவின் கேப்டன்சியில் விளையாடுவது மிகவும் சாதாரணமானது
-
Ghee Benefits : தினமும் நெய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
-
Producer Nelson Dilipkumar : தயாரிப்பாளரான நெல்சன் திலீப்குமார்